புதுக்கோட்டை: மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்
புதுக்கோட்டை:
இலங்கை கடற்படையின் நடவடிக்கைளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 5நாட்களுக்கு வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. மீனவர்களைஅடிக்கடி கைது செய்து செல்வதும், மீன் பிடி வலைகள், படகுகளை சேதப்படுத்துவதும்அதிகரித்து வருகிறது.
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ஏராளமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை சிறைகளில்வாடி வருகிறார்கள். அவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைக் கண்டித்தும்ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கினர். ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.