For Daily Alerts
Just In
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 30 அடி ஆக குறைவு!
சேலம்:
மேட்டூர் அணையில் வெறும் 30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணைக்கு 200 கன அடி நீர்தான் வந்துகொண்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரிதும் நம்பியிருக்கும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு படு மோசமானநிலையில் உள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு திறந்து விடப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் வெறும் 30 அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது.அணைக்கு விநாடிக்கு 208 கன அடி நீர்தான் வந்துகொண்டுள்ளது. அணை தற்போது மூடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைத்தால் மட்டுமே காவிரி டெல்டா பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடமுடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, January 9, 2004, 5:30 [IST]