கருணாநிதியுடன் நெடுமாறன் சந்திப்பு: திமுக கொடியை உயர்த்திப் பிடித்தார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு ஆகியோரை இன்றுசந்தித்துப் பேசினார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியது, விடுதலைப் புலிகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டது தொடர்பானவழக்குகளில் பொடா சட்டத்தில் கைதாகியிருந்த நெடுமாறன் ஜாமீனில் நேற்று விடுதலை ஆனார்.
அவரை சிறை வாசலில் திமுகவினர் பெருமளவில் திரண்டு வரவேற்றனர்.
இந் நிலையில் இன்று காலை அவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றார். அவருடன் தமிழர் தேசியஇயக்க பொதுச் செயலாளர் திருச்சி செளந்தரராஜன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோரும் சென்றனர்.
கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி தனக்காக குரல் கொடுத்தமைக்காகவும் மத்திய அரசிடம் போராடியதற்கும்நன்றி தெரிவிததார் நெடுமாறன். நெடுமாறனிடம் உடல் நிலையை விசாரித்த கருணாநிதி அவருத்து தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி செய்தியாளர்களுக்கு நெடுமாறன் பேட்டி கொடுக்கவில்லை.
இதனால் அவரிடம் திமுக கொடியைக் கொடுத்த கருணாநிதி, அதை உயர்த்திப் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்தப நெடுமாறனும் புன்னகைத்தாவாறே திமுக கொடியைப் பிடித்தார்.
அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவை அக் கட்சியின் அலுவலகத்தில்சென்று சந்தித்து தனது விடுதலைக்காக நெடுமாறன் நன்றி தெரிவித்தார்.