மலேசியா: 8 தமிழ் இளைஞர்களும் சென்னை திரும்பினர்
சென்னை:
மலேசிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழர்களும் இன்று சென்னை திரும்பினர்.
ராமாநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 8 இளைஞர்கள் கோலாலம்பூரில் வேலை பார்க்கச் சென்றனர்.ஆனால் அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதியை போலீஸார் சோதனை செய்து, 8 பேரையும் கைது செய்தனர்.போதைப் பொருள் வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் பரவியதால் தமிழகத்தில் பரபரப்புநிலவியது. பல்வேறு சமூக நல அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் பிரதமர், மத்திய வெளியுறவுஅமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு கடிதங்கள், தந்திகளை அனுப்பி 8 பேரையும் காப்பாற்றுமாறுகோரிக்கை விடுத்தன.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு கடிதம் எழுதி, 8 பேரையும்மீட்க கோரினார். முதல்வரின் வேண்டுகோளையடுத்து யஷ்வந்த் சின்ஹாவும் உடனடி நடவடிக்கைஎடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை காலை 8 பேரையும் கோலாலம்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.விடுவிக்கப்பட்ட 8 பேரும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும்உடனடியாக இந்தியா திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
இதையடுத்து சரவணன் என்பவரைத் தவிர மற்றவர்கள் விமான பயணத்திற்கான நிதியைத் திரட்டி டிக்கெட் வாங்கிவிட்டனர். ஆனால் சரவணனிடம் அந்தளவுக்குப் பணம் இல்லாததால் அவரால் டிக்கெட் வாங்க முடியவில்லை. இத்தகவல், திண்டுக்கல்லில் உள்ள பீஸ் என்ற சமுக நல அமைப்பின் தலைவர் பால்பாஸ்கருக்கு (இவர்தான் 8தமிழர்களையும் மீட்க முழு முயற்சிகள் எடுத்தவர்) தெரிவிக்கப்பட்டது.
பால்பாஸ்கர் உடனடியாக பினாங்கு மனித உரிமைக் கழக தலைவர் முகம்மது இத்ரிஸ் என்பவரை தொடர்புகொண்டு சரவணனுக்கு உதவுமாறு கோரினார். இத்ரிஸும், சரவணனின் பயணத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு அவரது பயணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
சென்னை வந்த 8 பேரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். சென்னைக்குவந்ததும் நாளை ஜெயலலிதாவை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications