For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவிலிருந்து சக்கர நாற்காலியில்....

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இதற்கிடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சிறையில் அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை அபாயத்திலிருந்து தப்பிய 8தமிழர்கள் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருச்செல்வம், வரதராஜன், சரவணன் உள்ளிட்ட 8 இளைஞர்கள் மலேசியத் தலைநகர்கோலாலம்பூருக்கு வேலைக்காக சென்றனர். ஆனால் இவர்கள் ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டுவழக்கு தொடரப்பட்டது.

மலேசிய நாட்டுச் சட்டப்படி போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை என்பதால் இவர்கள் 8 பேருக்கும் மரண தண்டனைவிதிக்கப்படும் என்ற பீதி எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு மத்திய அரசை தட்டி எழுப்பி 8 பேரையும்மீட்டார்.

இதையடுத்து 8 பேரையும் கோலாலம்பூர் நீதிமன்றம் விடுவித்தது. நேற்றிரவு இவர்கள் விமானம் மூலம் சென்னை வந்துசேர்ந்தனர்.

இவர்களில் வரதராஜன் என்பவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கால்களில் வீக்கம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில்வைத்து தான் இவர் கொண்டு வரப்பட்டார். வேலைக்காக அந்த ஊருக்குப் போய் சிறையில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டதில்அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் சிறையில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், விலங்குகள் போல தாங்கள் நடத்தப்பட்டதாகவும் 8 பேரும்கண்ணீருடன் தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை மீட்க ஜெயலலிதா மூலம் பெரும் முயற்சி எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக நல அமைப்பின் தலைவரான பால்பாஸ்கர் விமான நிலையத்திற்கு வந்திருந்து இவர்களை வரவேற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X