For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் கொடுமை: முன்னாள் அரசு ஊழியர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸ் துன்புறுத்தல் காரணமாக முன்னாள் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் போக்குவரத்துத் துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6மாதங்களுக்கு முன் இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆட்டோ, வேன் வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்தார்.

சில மாதங்களுக்கு முன் இவரது வேன், ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர். போலி ஆவணங்கள்இருப்பதாக கூறி அவற்றை முடக்கி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பான விசாரணைக்காக அடிக்கடி காவல் நிலையத்திற்கு ராஜமாணிக்கத்தை வரச் சொல்லி அலைக்கழித்தனர்.அவரிடம் பணம் பிடுங்கி வந்தனர். மேலும் பணம் கேட்டு தொல்லைப்படுத்தினர்.

வேன், ஆட்டோக்களையும் பறிகொடுத்து விட்டு வருமானம் இல்லாமல் ராஜமாணிக்கம் கஷ்டப்பட்டுள்ளார். டீ கடையும்நடத்திப் பார்த்தார்.

ஆனால் போலீஸார் அடிக்கடி வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X