தமிழகத்தில் 23 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு: விசாரிக்க குழுவை அனுப்புகிறது தேர்தல் கமிஷன்
டெல்லி:
தமிழகத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள்சென்றுள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத்தில் தமிழகத்தில் 23 லட்சத்திற்கு அதிகமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல்ஆணையத்திற்கு வந்த தகவல்கள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் எதிர்க்கட்சிகள் புகார் கூறியதையடுத்து, 23 லட்சம் போலி வாக்காளர்களை நீக்ககடந்த ஆகஸ்டு மாதம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பிறகும் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தமக்கள் தொகையில் 70 சதவீதம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
விதிகளை மீறி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதும், நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம்கருதுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு சிறப்புக் குழு ஒன்றை அனுப்பவும் தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
இந்தக் குழுவின் ஆய்வுக்குப்பின் போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அதன்பிறகுஇறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications