For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் சவுக்கடியில் இருந்து தப்பி வந்த 13 தஞ்சை தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கட்டுமான வேலைக்காக சிங்கப்பூர் சென்று விசா காலம் முடிவடைந்த பிறகும் அங்கு தங்கியிருந்த குற்றத்திற்காக சிங்கப்பூர்காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட 13 தஞ்சாவூர் இளைஞர்கள் நேற்றுசென்னை வந்து சேர்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலையன் உள்ளிட்ட 13 இளைஞர்கள் கட்டுமான வேலைக்காக சிங்கப்பூர் சென்றனர். அங்குஓரளவு சம்பாதித்த அவர்கள், விசா காலம் முடிவடைந்த பிறகும் தங்கினர்.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாய வேலை ஏதும் இல்லாத நிலையில், தஞ்சைக்குத் திரும்பி மீண்டும் சாப்பாட்டுக்குக்கஷ்டப்படுவதை விட முடிந்தவரை சம்பாதித்து விட்டுச் செல்வோமே எனறு நினைத்தது தொடர்ந்து அங்கேயே தங்கியது தான்அவர்கள் செய்த மிகப் பெரிய தவறானது.

விசா காலம் முடிந்த பிறகும் தங்கிய குற்றத்திற்காக 13 பேரையும் சிங்கப்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அங்கு அவர்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாள முடியாது.

அதை பாலையனே கூறுகிறார், தினசரி புழு நெளியும் சாப்பாடுதான் கொடுப்பார்கள். தினசரி பிரம்பால் அடிப்பார்கள். தண்ணீர்கேட்டு கதறினாலும் கொடுக்க மாட்டார்கள். நாய்களை விடவும் கேவலமாக நடத்தினார்கள்.

அரை நிர்வாண கோலத்தில்தான் எங்களை வைத்திருப்பார்கள். தலையை மொட்டை அடித்து விட்டார்கள். எங்களதுசூட்கேஸ்களை உடைத்து விட்டார்கள்.

இப்போது எப்படியோ சென்னை வந்துவிட்டோம். ஆனால், தஞ்சாவூருக்கு போகக் கூட இப்போது எங்களிடம் பணம் இல்லை.இன்னும் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூர் சிறையில் துன்பப்பட்டு வருகிறார்கள்.

அவர்களை மீட்க தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரில் பல சீனர்களும் விசா காலம் முடிந்த பிறகு தங்குகிறார்கள். அவர்களை எதுவும் செய்யாமல் திருப்பிஅனுப்புகிறார்கள். ஆனால் இந்தியர்களைத்தான் மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.

இந்தியத் தூதரகம் எங்களுக்கு எந்த உதவியையும் செய்ய மறுத்து விட்டது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X