நாகர்கோவில்: ஜீனாகுமரி மீது 3-வது முறையாக ஆசிட் வீச்சு!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடத்தைச் சேர்ந்த ஜீனாகுமாரி மீது 3வது முறையாக அமிலம் வீசப்பட்டுள்ளது.முகத்தில் காயத்துடன் அந்தப் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் ஜீனாகுமாரி. இவர் வடக்குன்குளம் என்ற இடத்தில் உள்ளமருத்துவக் கல்லூரியில் டி.பார்ம் (மருந்தாளுனர் பட்டயப் படிப்பு) படித்து வந்தார். அப்போது ஜோன்ஸ்என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் ஜோன்ஸின் நடவடிக்கை பிடிக்காததால் காதலை முறித்துக் கொண்டார்ஜீனாகுமாரி.
இதனால் ஆத்திரமடைந்த ஜோன்ஸ், ஜீனாகுமாரி மீது கடந்த ஆண்டு 2 முறை அமிலம் வீசினார். இதில்காயமடைந்த ஜீனாகுமாரி சிகிச்சைக்குப் பிறகு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இடமாறுதல் கோரி சென்றார்.
அங்கு சென்ற பிறகும் ஜோன்ஸ் விடவில்லை. ஜோன்ஸின் நண்பர்கள் சிலர், ஜீனாகுமாரியை ஏமாற்றிப் பேசிபெங்களூருக்குக் கடத்திச் சென்றனர்.
அங்கு வைத்து, ஜோன்ஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ஜீனாகுமாரியை மிரட்டியுள்ளனர். பின்னர் அவரைசென்னையில் விட்டு விட்டனர். அதன் பிறகு படிப்பை கைவிட்டுவிட்டு வெள்ளமடத்திற்கேத் திரும்பினார்ஜீனாகுமாரி.
இந் நிலையில் தனது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மகள் சந்தியாவுடன் (வயது 8) பேசிக்கொண்டிருந்தார் ஜீனாகுமாரி. அப்போது ஜோன்ஸின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து ஜீனாகுமாரி மீது அமிலத்தைவீசி விட்டு தப்பினர்.
அதில் ஜீனாகுமாரியின் முகத்தின் இடதுபுறம், கை ஆகியவை காயமானது. சந்தியாவின் முகத்திலும் காயம்ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் திருநெல்வேலி அரசுமருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே பெண்ணின் மீது தொடர்ந்து 3வது முறையாக அமில வீச்சு நடந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications