குப்பை அள்ளும் பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும்!

Subscribe to Oneindia Tamil

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் பணிக்கு துப்புறவுத்தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும் குப்பை அள்ளும் பணியைமேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலம் செஞ்சி. இங்குள்ள கோட்டை மிகவும் பிரசித்தி பெற்றது.வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செஞ்சி, பேரூராட்சி அந்தஸ்து பெற்ற சிறு நகரம்.

இங்கு துப்புறவுத் தொழிலாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு இல்லாத காரணத்தாலும், சரியானமுறையில் ஊதியம் கொடுக்கப்படாததாலும் யாரும் இப் பணிக்கு வருவதில்லை.

பேரூராட்சிக்கு அரசு கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுக்காததாலும், நிதியை உயர்த்த அரசு மறுத்துவருவதாலும் நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது செஞ்சி பேரூராட்சி.

இந் நிலையில் துப்புறவு வாரம் அனுசரிக்குமாறு செஞ்சி பேரூராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால்வெறும் 13 துப்புறவுத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி துப்புறவு வாரத்தை அனுசரிப்பதுஎன்று பேரூராட்சித் தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் விவாதித்தனர்.

இதைத் தொடர்ந்து தாங்களும் களம் இறங்கி துப்புறவுப் பணியில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து கூடுதல்நிதியைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் கையில்துடைப்பத்துடன் செஞ்சி நகரில் வலம் வந்து கொண்டுள்ளனர்.பேரூராட்சித் தலைவரே துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ளது செஞ்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+