சிறையில் வைகோவை இன்று சந்திக்கிறார் பாஸ்வான்
சென்னை:
லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் இன்று வேலூர்மத்திய சிறை சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்கவுள்ளார்.
சென்னை வந்த அவர் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதியின் இல்லத்தில் நடந்தசந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், மக்கள் மீதும், கடந்த 4 ஆண்டுகளில் நடத்தியதனது ஆட்சியின் மீதும் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை. இதனால்தான் மினி பட்ஜெட்டை அறிவித்து மக்களைஏமாற்றப் பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடந்த வட மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியுடன்இருந்ததால் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததாக பா.ஜ.க. விமர்சனம் செய்தது. அதே அதிருப்தி அலையால்நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் வீழ்த்துவார்கள்.
பொதுத்துறைகளை தனியாருக்கு விற்றதன் மூலம் தேசிய ஜனநாயக அரசு ரூ. 35,000 கோடி பணத்தைமிச்சப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பணம் எங்கே போனது? எதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதுஎன்பது தெரியவில்லை என்றார் பாஸ்வான்.
பாஸ்வான், காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இணையப் போவதாக ஏற்கனவேதெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இன்று வேலூர் மத்தியசிறைக்குச் சென்று வைகோவையும் பாஸ்வான் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications