பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பா.ம.க விலகல்: ராமதாஸ் அறிவிப்பு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி இன்று விலகியது. இக் கட்சி திமுகதலைமையிலான கூட்டணியில் சேரவுள்ளது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு நடக்க இருந்த இக் கூட்டம் திடீரென மாலைக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாலையில் நடந்தகூட்டத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவது என்றும், மத்திய அமைச்சரவையில் உள்ள சண்முகம், ஏ.கே.மூர்த்தி ஆகியஇருவரையும் ராஜினாமா செய்ய வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும்முடிவெடுக்கப்பட்டது.
பா.ம.கவுக்கு இப்போது 5 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கட்சியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சிகளான திமுகவும், மதிமுகவும் விலகி விட்ட நிலையில்பா.ம.க தனது நிலையைத் தெளிவுபடுத்தாமல் இருந்து வந்தது.
பா.ஜ.க. கூட்டணியை உதறிவிட முடிவெடுத்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இன்றே திமுக தலைவர்கருணாநிதியை சந்திப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications