டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
சென்னை:
ஆட்குறைப்புக்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.) ஊழியர்களில் 90 சதவீதம் பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. .
தமிழக அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாமுதல்வர் பதவிக்கு வந்த பிறகு அரசுப் பணிகளுக்கு ஆளெடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த இரண்டரைஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கு யாரும் எடுக்கப்படவில்லை.
ஆசிரியர்கள், காவலர்கள் உள்ளிட்ட ஒரு சில பணிகளுக்கு மட்டுமே ஆளெடுப்பு நடந்து வருகிறது. இந் நிலையில்கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு வேலையும் இல்லாமல் உள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களைக் குறைக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி தற்போதுள்ள ஊழியர்களில் 90 சதவீதம் பேரை பணியிறக்கம் செய்யவும், காலியாகவுள்ள வேறுதுறைகளுக்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பிய பிறகும் ஊழியர்கள்இருந்தால் அவர்களை வேலையை விட்டு அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்த செய்தியால் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசுபதவியேற்றது முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. வேலைநிறுத்தம்செய்த அரசு ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சமீபத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைதமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இந் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில்பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை கோரி பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும்வேலைக்கு ஆளெடுப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பையே செயலிழக்க வைக்கும் வகையில் ஆட்குறைப்புக்கு அரசு முடிவுசெய்துள்ளது வேலையில்லாத இளைஞர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications