உஸ்பெகிஸ்தான் விமான விபத்து: 36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டு தலைநகர் தாஷ்கண்டில் அந் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 36பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் யாரேனும் தப்பிப் பிழைத்தார்களா என்பது குறித்து இதுவரை தகவலில்லை. உஸ்பெகிஸ்தானுக்கானஐ.நா உயர் அதிகாரி ரிச்சர்ட் கான்ராய்(56) இந்த விமானத்தில் பயணம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துஇன்னும் உறுதியான தகவல் கிடைக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் தொண்டு நிறுவனங்கள் டெர்மஸ் நகரில் இருந்துஇயங்கி வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான் டெர்மஸ் நகருக்கும், தாஷ்கண்டிற்கும்இடையேயான விமானப் போக்குவரத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications