For Daily Alerts
Just In
தேர்தல் வருவதால் மீண்டும் பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை
சென்னை:
நிதி நெருக்கடி என்று சொல்லி கடந்த இரண்டு வருடங்களாக ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கல் தினத்தன்றுஇலவச வேஷ்டி, சேலை வழங்குவதை, நிறுத்தி வைத்திருந்த அதிமுக அரசு இந்த ஆண்டு முதல் மீண்டும் அதைவழங்குகிறது.
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி இந்த பொங்கலுக்கு மீண்டும் இலவச வேஷ்டி, சேலை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களின் தலைமையில் தாசில்தார் அலுவலகங்கள் முன்புவினியோகம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து வருகின்றனர். கிராமப்பகுதிகளில் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், நகர்ப்புறங்களில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரையிலும் இந்தப் பணி நடைபெறும்.
இதற்காக 81 லட்சம் சேலைகளும், 74 லட்சம் வேஷ்டிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, January 13, 2004, 5:30 [IST]