மதுரை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் காயம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

போலீசாரால் கைப்பற்றப்பட்டு, மதுரை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு இன்று வெடித்தது. இதில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

மதுரை செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆவண அறையில் போலீஸார் கைப்பற்றிய வெடிகுண்டுகள் மற்றும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறையை நீதிமன்ற ஊழியர் ஒருவர் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் அந்த ஊழியர் காயமடைந்தார். அறையும் சேதமடைந்தது. வெடிகுண்டு சத்தம் நீதிமன்ற வளாகத்தையும் தாண்டி வீடுகள் இருந்த பகுதி வரை கேட்டது. பலத்த சத்தத்தினால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களும் அதிர்ந்தன. இந்தச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது.

வழக்குகளுக்கு சாட்சியாக வெடிகுண்டுகளை வைக்கும்போது, அவற்றைச் செயலிழக்க வைத்தபின்னரே நீதிமன்ற ஆவண அறையில் வைப்பது வழக்கம். இங்கு அவ்வாறு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யாமல் வைத்திருந்தது ஏன் என்ற நோக்கில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+