அமைச்சர் மில்லரின் கட்சிப் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் வசம் இருந்த நீலகிரி மாவட்டச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதாஇன்று பறித்தார். விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோகலாம் என்று தெரிகிறது.
கொளப்பாக்கத்தில் நடந்து வரும் அதிமுக நிர்வாகிகளுடனான நேர் காணலில் ஒருவர் மீது ஒருவர் குறைகளைக்கூறி, ஒருவரின் பதவிக்கு அடுத்தவர் குழி பறித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது மில்லரிடம் இருந்து பதவி பறிபோயுள்ளது. இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
கழகத்துக்கு துரோகம் செய்து வெளியேறிவர்களைப் பற்றி தவறான தகவல் தந்து, அவர்களை கட்சிப் பதவியில்அமர்த்த பரிந்துரையு செய்துள்ளார் மில்லர். உண்மைகளை அவர் மறைத்ததால் கடந்த 7ம் தேதி நடந்த நீலகிரிமாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உண்மையான விசுவாசிகள் போட்டியிட வாய்ப்பேஇல்லாமல் போய்விட்டது.
இதனால் அவரிடம் உள்ள நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்படுகிறது. அவருக்குப் பதில்எம்.ஜி.சீனிவாசன் அந்தப் பதவியில் அமர்த்தப்படுகிறார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications