மூர்த்தி, சண்முகம் நாளை ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Ramdoss meets Karunanidhiதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பா.ம.க விலகி விட்டதால், அக் கட்சியைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்களான ஏ.கே. மூர்த்தியும், சண்முகமும் நாளை பதவி விலகுகின்றனர்.

மத்திய ரயில்வே துறை இணையமைச்சராக உள்ள ஏ.கே. மூர்த்தி தமிழகத்துக்கு வரலாறு காணாத அளவில்ரயில்வே திட்டங்களைக் கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளார். பெரிய அளவில் படிப்பு இல்லாவிட்டாலும் வடஇந்திய அதிகாரிகளின் முட்டுக் கட்டைகளையும் மீறி தமிழகத்துக்கு பல ரயில் திட்டங்களைக் கொண்டு வந்துகாட்டியுள்ளார்.

அவரும் உணவுப் பதப்படுத்தல்துறை இணையமைச்சருமான சண்முகமும் நாளை தங்களது ராஜினாமா கடிதங்களைபிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து வழங்குகின்றனர்.

தமிழகத்தின் சார்பில் அமைச்சர்களாக இருந்த திமுகவைச் சேர்ந்த மாறன் மறைந்தார். பாலு, ராஜா, மதிமுகவைச்சேர்ந்த கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.

மூர்த்தியும், சண்முகமும் விலகிவிட்டால், தமிழகத்தின் சார்பில் பா.ஜ.கவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்,திருநாவுக்கரசர் ஆகிய இருவர் மட்டுமே மத்திய அமைச்சர்களாக இருப்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+