அணு, ஏவுகணை, விண்வெளி ஆய்வில் இந்தியா- அமெரிக்கா கூட்டு
வாஷிங்டன்:
விண்வெளி ஆராய்ச்சி, அணு சக்தி, ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஹை-டெக் ஆராய்ச்சிகளில்இந்தியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
இந்தத் துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவும், வர்த்தமும்அதிகரிக்கும். ஆசியாவில் நிலையான அமைதியும் ஏற்படும். உலக அமைதிக்காக, தீவிரவாதத்தை ஒழிக்கும்பணியில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார் புஷ்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இருநாடுகளுக்கிடையே உறவுபலப்படுவது, ஏற்றுமதிக் கொள்கையில் இந்தியா எவ்வாறு தாராளமாக நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்தேஅமையும்.
இந்தியாவுடனான நட்பை அதிகரிக்க அமெரிக்கா விரும்பினாலும், அணு ஆயுத தயாரிப்பில் இந்தியாஈடுபடுவதை ஆதரிக்கவில்லை. இந்த அறிக்கையை அதிபர் புஷ் வெளியிடுவது தொடர்பாக பாகிஸ்தானுக்குமுன்னதாகவே செய்தி தெரிவிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications