பாலசிங்கம்- நார்வே தூதர் இன்று சந்திப்பு
லண்டன்:
நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன்பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த நவம்பர் 4ம் தேதி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ராணுவத் துறையை தன்வசம் எடுத்துக்கொண்டதால், அதிபருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
ராணுவத் துறையைத் திருப்பி ஒப்படைத்தால்தான் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்என்று ரணில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து அமைதி முயற்சியிலிருந்து தாற்காலிகமாகவிலகுவதாக நார்வே தூதுக் குழு அறிவித்தது.
அதிபருக்கும், பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நார்வே தூதர்எரிக் சோல்ஹைம் அண்டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசுகிறார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில், புலிகளின் நிலைப்பாடு, இலங்கையில் அரசியல் நிலவரம் ஆகியவை குறித்துஇருவரும் விவாதிக்கிறார்கள்.
சுதந்திர தினம்: கருப்பு தினமாக அனுஷ்டிப்பு
இதற்கிடையே இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி 4ம் தேதியை, கருப்பு தினமாக அனுஷ்டிக்கப் போவதாகயாழ்பாணத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
அன்றைய தினம் யாழ்பாணத்தில் கருப்புக் கொடிகள் ஏற்றப்படும் என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.
தொடரும் சந்திரிகா- ரணில் மோதல்:
இந் நிலையில் நேற்றிரவு இலங்கைத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சந்திரிகா, எனது பதவிக்காலம் 2006ம்ஆண்டு வரை நீடிக்கும், அதிபர் பதவியில் நீடிப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் பொறுப்பு என்னைச்சேர்ந்தது என்று கூறியுள்ளார்.
இதற்கு இன்று பதிலளித்த ரணிலின் செய்தித் தொடர்பாளார் ஜி.எல்.பெரீஸ், சந்திரிகா தன் பதவிக்காலத்தைமேலும் ஓராண்டிற்கு நீட்டித்து எடுத்துக் கொண்ட ரகசிய பதவிப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.