என்ஜின் இல்லாத ரயில் பெட்டிகள்: திமுக கூட்டணி குறித்து பா.ஜ.க
சென்னை:
பா.ம.க. விலகியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழப்பு எதுவும் இல்லை என்று அகில இந்திய பா.ஜ.க.செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் தேர்தல்முரசு கொட்டப்பட்டு விட்டது. அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணியை துவங்க வேண்டிய நிலைஉருவாகியுள்ளது.
கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று பா.ம.கவிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை.
ஒரு தண்டவாளத்தில் நிறைய பெட்டிகள் (திமுக கூட்டணி கட்சிகள்) நிற்கின்றன. ஆனால், என்ஜின்இணைக்கப்படவில்லை. எத்தனை பெட்டிகள் இருந்தும் என்ன பயன்?
அதே நேரத்தில் விரைந்து ஓடக் கூடிய என்ஜின் (பிரதமர் வாஜ்பாய்) கொண்ட இன்னொரு ரயிலும் நிற்கிறது.
எதில் மக்கள் ஏறுவார்கள்? எங்கள் ரயிலில் தான் ஏறுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications