போகி புகை: விமானப் போக்குவரத்து பாதிப்பு; டயர்களை எரித்த 65 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போகி பண்டிகையையொட்டி சென்னை நகரில் பழைய பொருட்களையும் டயர்களையும் எரித்ததாலும் மற்றும்பனி காரணமாகவும் ஏற்பட்ட மூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மக்கள் எழுந்து பழையபொருட்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேளங்களைக் கொட்டியும் பொங்கல் திருநாளை வரவேற்றனர். போகி பண்டிகையின்போது பழையன கழிதல்,புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப வீட்டிலிருந்த பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

பழைய பொருட்கள் என்ற பெயரில் டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், வீட்டருகே உள்ள குப்பைகூழங்களுக்கு தீ வைத்தனர். சென்னை நகரில் இது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.

இதனால் சென்னையில் நகர் முழுவதும் புகை மூட்டமாக க்காணப்பட்டது. மேலும் அதிகாலைப் பனியுடன் சேர்ந்துகொண்ட இந்தப் புகை நகரை மூச்சு முட்டச் செய்தது. புகை மண்டலம் பரவி வானமும் புகை மூட்டமானது.

இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.புகை மூட்டம் குறைந்த பின்னர் தான் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

டயர்களால் தான் மிக அதிக புகை பரவுகிறது என்பதால், டயர்களை எரிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.ஆனால், அதையும் மீறி நகரில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததாக 65 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+