பிரசாரத்தை தொடங்குகிறார்கள் கம்யூனிஸ்டுகள்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன் கூட்டியே தொடங்க கம்யூனிஸ்ட் கட்சியினர் முடிவுசெய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இம் மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று எங்களதுதேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைமக்களிடம் விளக்குவோம்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.மொத்தம் 2,000 தெரு முனைப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்.
எங்களைப் போலவே திமுகவும் முன் கூட்டியே பிரசாரத்தைத் தொடங்குமாறு கருணாநிதியிடம் ஆலோசனைதெரிவித்துள்ளோம் என்றார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வருகிற 18ம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளது.அன்றைய தினம் ப.ஜீவானந்தம் நினைவு தினம்,திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் தினத்தைகொண்டாட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டத்தையே பிரசார தொடக்கமாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறுகையில், மாநிலம் முழுவதிலும் 100 இடங்களில் கூட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளோம் என்றார்.