கருணாநிதியை சந்தித்தார் வாசன்: தனது நிலையை தெளிவாக்கினார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப்பேசினார்.
திமுக அணிக்கு காங்கிரஸ் வந்துவிட்டாலும், வாசன் மீது இன்னும் கருணாநிதி சந்தேகத்துடன் தான் உள்ளார்.
சமீபத்தில் மன்மோகன் சிங்குடன் வந்து கருணாநிதியை வாசன் சந்தித்தார். ஆனால், அடுத்த நாள் முரசொலியில்வாசன் இல்லாத வகையில் எடுக்கப்பட்ட படங்களே வெளியாகின. அவரை அதிமுக ஆதரவாளர் என்றேபெரும்பாலான திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை கருணாநிதியை வாசன் சந்தித்தார். அப்போது தனது நிலையை வாசன்தெளிவாக்கியதாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிஅமையும் வகையில் முற்போக்குக் கூட்டணியை அமைத்துக் காட்டியுள்ளார் கருணாநிதி. அதற்காக அவரைவாழ்த்தினேன். பொங்கல் நல் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி அபார வெற்றி பெறும் என்றார்.
ராஜீவ் கொலை: திமுகவுக்கு தொடர்பில்லை
இந் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கோ, திமுக தலைவர்களுக்கோதொடர்பில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது எப்படி திமுகவுடன் கூட்டணிஅமைக்கலாம் என்று பிரதமர் வாஜ்பாய் எழுப்பியுள்ள கேள்விக்கு, நிருபர்களிடம் பதிலளித்த பிரணாப் முகர்ஜி,
1999ம் ஆண்டு வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும்தொடர்பில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை காங்கிரஸ் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதுஎன்றார்.
பா.ஜ.கவும் பல்டி:
ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காட்டி திமுக மீது பா.ஜ.க. குற்றம் சாட்டவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுக மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தியது. அதைக்காரணம் காட்டி மத்தியில் ஒரு அரசே கலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது. இப்போது அதே திமுகவுடன்கூட்டணி அமைப்பது சந்தர்ப்பவாதம். இப் பிரச்சனையில் பா.ஜ.க. குற்றம் சாட்டுவது காங்கிரசைத்தான், திமுகவைஅல்ல.
திமுக மீது காங்கிரஸ் காங்கிரஸ் கூறியது உணர்ச்சிப் பூர்வக் குற்றச்சாட்டு.
356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசைக் கலைக்க ஒருமுறைகூட கோரியதில்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டபோது திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் தலைமையில் கூடிய திமுகவினர் அதிமுக அரசைக் கலைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்என்றார்.