இலங்கை மீனவர்களைக் காப்பாற்றிய குமரி மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
படகு என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து பரிதவித்த இலங்கைமீனவர்களை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீட்டு சர்ச்சில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற இடத்திற்கு அருகே நடுக் கடலில் இலங்கை படகு ஒன்று 4மீனவர்களுடன் தத்தளிப்பதைப் பார்த்த தூத்தூர் பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றுபடகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் மீட்டனர்.
பின்னர் அவர்களை தூத்தூர் சர்ச்சிற்குக் கொண்டு வந்த பாதிரியார் செங்கோலிடம் ஒப்படைத்தனர்.காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஜோசப், ஜூடித், லாசரஸ், சுதீஷ் சமேர், சாலி காயாடி என்பதும், இலங்கையின்புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications