பிரசாரத்திற்கு வருகிறார் பிரியங்கா: இளங்கோவன் தகவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
நாடாளுமன்றத் தொகுதி உடன்பாடு குறித்து கருணாநிதியும், சோனியா காந்தியும் பேசி முடிவு செய்வார்கள் என்றுகாங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாகதிமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரில் பேசி முடிவு செய்வார்கள்.காங்கிரஸ் கட்சியின் கெளரவம் குறையாத வகையில் தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளும் சேர வேண்டும்.
முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக சோனியா காந்தியும், பிரியங்காவும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவருவார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications