புளோரிடாவில் இந்திய மாணவர் கொலை: துப்பு கொடுத்தால் 10,000 டாலர் பரிசு
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் இந்திய மாணவரைக் கொன்றவர்கள்குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 10,000 டாலர் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள மெகூரி வில்லேஜ் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில்வசித்து வந்தார்.
கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பின் சுதீரைக் காணவில்லை. இதையடுத்து கடந்த 4ம் தேதி அவரது வீட்டை போலீசார்உடைத்து சோதனையிட்டபோது, சுதீர் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
சுதீரின் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம், விசிடி பிளேயர், டிவிடி பிளேயர் முதலான பொருட்களையும்காணவில்லை. இந்தப் பொருட்களின் விவரத்தை வெளியிட்டுள்ள புளோரிடா மாகாண போலீசார்,கொலையாளிகள் குறித்து விவரம் தந்தார் 10,000 டாலர் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications