For Daily Alerts
Just In
தமிழகத்திற்கு தண்ணீர்: பரிசீலிப்பதாக கிருஷ்ணா அறிவிப்பு
கரூர்:
தண்ணீன்றி வாடும் காவிரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதாக கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கரூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியன் தலைமையிலான விவசாயிகள் குழு பெங்களூர்சென்று கிருஷ்ணாவை சந்தித்தது.
அக்குழுவினர், காவிரி டெல்டா பாசன பகுதிகள் தண்ணீன்றி வாடுவதையும், சம்பா பயிர்கள் கருகி வருவதையும்சுட்டிக் காட்டி, உடனடியாக 10 டிஎம்சி தண்ணீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மனுவும் கொடுத்தனர்.
அதைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணா, கர்நாடகத்தில் பல பகுதிகளில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைஉள்ளதாகவும், இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்குதண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதியளித்ததாக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, January 16, 2004, 5:30 [IST]