சோனியாவுடன் பேச திமுக தூதர் டெல்லி விரைகிறார்
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கூட்டணி குறித்தும், இடங்கள் பகிர்வு குறித்தும் பேச்சு நடத்த திமுகவின்சார்பில் தூதர் ஒருவரை நாளை டெல்லிக்கு அனுப்புகிறார் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதியுடன் சோனியா காந்தி இருமுறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மூத்ததலைவர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதியிடம் அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் விமானப் பயணம் ஒத்துக் கொள்ளாது என்பதால் டெல்லி செல்வதைத் தவிர்த்து வரும் கருணாநிதி,தன் சார்பில் தூதர் ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளார். இத் தகவலை சோனியா காந்தி இன்று டெல்லியில்தெரிவித்தார்.
இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களிடம்பேசிய சோனியா, நானும் நேரில் சென்று நிச்சயமாக கருணாநிதியை சந்திப்பேன். இப்போதைக்கு திமுக சார்பில்தூதர் இங்கு வரவுள்ளார் என்றார்.
முன்னாள் மத்திய டி.ஆர்.பாலுவையே கருணாநிதி அனுப்பி வைப்பார் என்று தெரிகிறது. உடன் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதியும் செல்ல வாய்ப்பிருப்பதாகத்தெரிகிறது.