டிஸ்மிசை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லும் அரசு ஊழியர்கள்
சென்னை:
பணிநீக்கம், பதவி இறக்கம், அபராதம் விதிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அதை எதிர்த்து, வரும் 19ம் தேதி உயர்நீதிமன்றம் மற்றும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.
இத் தகவலை ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்தது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் குழு 999 பேரை டிஸ்மிஸ் செய்தும், மற்றவர்களுக்குஅபராதம், பதவி இறக்கம் ஆகிய தண்டனைகளை அளித்தது.
இந் நிலையில் 999 பேர் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத்தண்டனைகளை எதிர்த்து வரும் 19ம் தேதி நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில், தங்களதுவழக்குகளுக்கு ஏற்ப மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
ஒவ்வொரு ஊழியரும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications