அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் தாக்கி 82 பேர் படுகாயம்
மதுரை:
மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 80 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டாலும், மதுரை அவனியாபுரத்தில் வருடா வரும் பொங்கல்திருநாளன்றே ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
அதேபோல நேற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள்இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
அந்தக் காளைகளை அடக்க திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், வாடி வாசலிலிருந்து திறந்துவிடப்பட்ட காளைகளைப் பிடிக்கப் பாய்ந்தனர்.
இந்த முயற்சியின்போது பல இளைஞர்களை காளைகள் பதம் பார்த்தன. மொத்தம 82 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது தவிர ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது இரு பிரிவினருக்கிடையே மோதலும் ஏற்பட்டது. இதையடுத்துபோலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications