குமயிரில் இன்று காணும் பொங்கல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில்நாளை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தினத்திற்கு அடுத்த நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந் நிலையில்கன்னியாகுமயில் இன்றே காணும் பொங்கல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரைஉள்ளிட்ட குமரியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்கு சென்று திரும்பியோர் மற்றும் உள்ளூர் மக்கள் என குமரியில் எங்குபார்த்தாலும் மக்கள் தலைகளாகவே உள்ளது.
சென்னையில் நாளை இந்த காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிக அளவில்கூடும் மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், காணும் பொங்கல் தினத்தன்று கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நீச்சல் தெந்த வீரர்களும்கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்படவுள்ளனர்.
பாண்டிச்சேரியிலும் நாளை மக்கள் வெள்ளம் அலை மோதும் என்பதால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.