பணப் பையை பறித்துக் கொண்டு ஓடிய 4 பெண்கள்: பொதுமக்கள் துரத்திப் பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி பஸ் நிலையத்தில் ஒரு பெண் வைத்திருந்த ரூ. 10,000 பணம் அடங்கியபையைப் பறித்துக் கொண்டு ஓடிய 4 பெண்களை பொதுமக்களே துரத்திப் பிடித்தனர்.

சத்திரப்பட்டி பஸ் நிலையத்தில் ஒரு பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரிடம் இருந்த பையில் ரூ. 10,000 பணம்இருந்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட நான்கு திருட்டுப் பெண்களும் அந்தப் பெண்ணை நெருங்கினர்.

திடீரென பணப் பையை பறித்துக் கொண்டு ஓடினர். இதைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு அந்தப் பெண்களைத் துரத்தினர்.

சிறிது நேர துரத்தலுக்குப் பின் நான்கு பெண்களும் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டனர். ஆண்களுக்கு இணையாக இந்தப் பெண்கள் பணத்தை திருடி விட்டு தப்பியோடியதுசத்திரப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+