காணாமல் போன 2 மீனவர்கள் பிணமாக மீட்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
புதுக்கோட்டைமாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்கள் ராமேஸ்வரம் கடறகரையில் கரை ஒதுங்கின.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஆரணி, காத்தவராயன் ஆகிய இரு சகோதரர்களும், சிவகுருநாதன் என்ற இன்னொரு மீனவரும்கடந்த 8ம் தேதி நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
மோசமான வானிலை காரணமாக இவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது. மூன்று பேரும் கடலில் மூழ்கினர். இவர்களில்சிவகுருநாதனை பாம்பன் பகுதி மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.
இந்த நிலையில் காத்தவராயனின் உடல் உச்சிப்புளி அருகே கரை ஒதுங்கியது. அவரது சகோதரர் ஆரணியின் உடலும்வெள்ளிக்கிழமை அதே பகுதியில் கரை ஒதுங்கியது.












Click it and Unblock the Notifications