சென்னை குடிநீர் பஞ்சம்: ரூ. 700 கோடி கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 700 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனைக் கட்சி அம் மாநில வறட்சி நிவாரண நிதிக்கு ரூ. 2,000 கோடிவழங்க வேண்டும் என்று நெருக்குதல் தந்து வருகிறது. கூட்டணியைக் காப்பாற்ற நிதியை வழங்க வேண்டிய நிலையில் மத்தியஅரசு உள்ளது.

இதே ஸ்டைலில் இப்போது முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்துள்ளார். பா.ஜ.கவுடன் கூட்டணிஅமையலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசின் நிதியைக்கோரியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:

சென்னையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. இதனைச் சமாளிக்க தேசியஅவசரகால நிவாரண நிதியில் இருந்து ரூ. 700 கோடியை தமிழகத்துக்குத் தர வேண்டும்.

சென்னையைக் காப்பாற்ற எங்களிடம் பணமில்லை. வேறு வழியும் தெரியவில்லை. இதனால், இதனை ஒரு தேசியபிரச்சனையாகக் கருதி உடனே நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+