ஓய்வு பெறுகிறார் தனி நீதிபதி: "அந்தரத்தில்" ஸ்பிக் ஊழல் வழக்கு
சென்னை:
சென்னை தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் விசாரித்து வரும் ஸ்பிக்ஊழல் வழக்கின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக திமுகஆட்சிக்காலத்தில் 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அவற்றில் இரண்டு கலைக்கப்பட்டன.தற்போது ஒரு நீதிமன்றம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் நீதிபதியாக ராஜமாணிக்கம் உள்ளார்.
அவர் முன் தற்போது 2 முக்கிய வழக்குகள் உள்ளன. அதில் ஒன்று ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு. இந்த வழக்கின் விசாரணை கடந்தவாரம் முடிவடைந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை அறிவிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதால் இதில்தீர்ப்பு கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று ரூ. 1.19 கோடி இலவச செருப்பு ஊழல் வழக்கு. இதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் மீது வழக்குநடந்து வருகிறது.
இந் நிலையில் நீதிபதி ராஜமாணிக்கம் வருகிற 31ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளதால், ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற தடை இருப்பதால் தீர்ப்பு கூறப்படவில்லை.
தான் ஓய்வு பெறவுள்ளதால், தடையை நீக்குமாறு கோரி நீதிபதி ராஜமாணிக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு31ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அதில் தடை விலக்கப்பட்டால், ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும். இல்லாவிட்டால், நீதிபதியின் ஓய்வுக்குப் பின்இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே இருக்கும். வேறு நீதிபதி நியமிக்கப்பட்டால், மீண்டும் முழுமாைக விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதனால் ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கின் நிலையே கேள்விக்குறியாகியுள்ளது. நீதிபதி ராஜமாணிக்கம் ஓய்வு பெறுவதற்குள் இந்தவழக்கு முடிவுக்கு வருமா அல்லது தொடர்ந்து நிலுவையில் இருக்குமா என்பது உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது.












Click it and Unblock the Notifications