திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை, கோவிலில் சிறப்பு பூஜை
ஈரோடு:
உலகப் பொதுமறையாம் திருக்குறளை அருளிய தெய்வப் புலவன் திருவள்ளுவரின் பிறந்த நாள் நேற்று தமிழகத்தில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் கோவிலில்சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இந் நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி அரசு விதித்திருந்த தடையையும் மீறி ரகசியமாக மது விற்பனை செய்தஹோட்டல்கள் மீது போலீஸார் திடீர் சோதனை நடத்தி ஹோட்டல் மேலாளர்களைக் கைது செய்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார், செம்மலை ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் அரசுத் தடையையும் மீறி ஈரோட்டில் உள்ள பல ஹோட்டல்களில் மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு ஹோட்டல்களின் பார்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 6ஹோட்டல்களில் மது விற்பனை நடந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டல்களின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் வருவதைப் பார்த்ததும்மது அருந்த வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பார்களில் இருந்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள், வசூலான பணம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications