மின்சாரம் தாக்கி 3 அதிமுக தொண்டர்கள் சாவு
தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே மின்சார வயருக்கு அருகே உள்ள கொடிக் கம்பத்தில் அதிமுககொடியைக் கட்ட முயன்ற 3 தொண்டர்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால்கொண்டாடப்பட்டது. தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் பகுதியிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்கொண்டாடப்பட்டது.
அப்போது மின்சார வயர் அருகே உள்ள கம்பத்தில் அதிமுக கொடியைக் கட்ட சில தொண்டர்கள் கொடிக்கம்பத்தின் மூலம் ஏறிச் சென்றனர். கம்பத்தில் கொடியைக் கட்ட முயன்றபோது அருகில் இருந்த வயரில்அவர்களது கை பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி திருமலையாண்டி, இசக்கிமுத்து, முப்பிடாதி ஆகிய 3 பேரும்தூக்கி எறியப்பட்டனர். அவர்களுடன் இருந்த வேறு 5 பேரும் காயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்முப்பிடாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இசக்கிமுத்து மற்றும் திருமலையாண்டி ஆகியோர் மருத்துவமனைசெல்லும் வழியில் இறந்தனர். மற்ற 5 பேருக்கும் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.