வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகே தேர்தல்: தேர்தல் ஆணையர்
கோவை:
வாக்காளர் பட்டியல் திருத்தம், புகைப்பட அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகள் முடிந்த பின்னரே,மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மேலும் அவர் கூறியதாவது:
பிரச்சனைக்குரிய மற்றும் தீவரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புடைய வாக்குச் சாவடிகள் பற்றிஆராய்ந்துள்ளோம். தேர்தலின்போது அந்தப் பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். வாக்காளர் சேர்ப்பில்முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications