டெல்லியில் ஸ்டாலின்: சோனியாவுடன் இன்று சந்திப்பு
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்றுடெல்லி சென்றனர்.
அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது. அனைவராலும் கைவிடப்பட்டு விட்ட பா.ஜ.கவும் வேறு வழியின்றி தனித்துநிற்கவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் திமுக, அடுத்து தொகுதிப் பங்கீடுதொடர்பான பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது. இதற்காக திமுக தலைவர்கருணாநிதியின் தூதர்களாக ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் இன்று டெல்லி சென்றனர்.
சோனியாவை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதியின் கருத்துக்களைத் தெரிவித்து விட்டு சோனியாவின்கருத்தையும் கேட்கவுள்ளார்கள்.
இந்த பயணத்தின் மூலம் திமுகவில் ஸ்டாலினின் அதிகாரத்தை மேலும் ஒரு படி உயர்ந்தியுள்ளார் கருணாநிதி. இளைஞர் அணிசெயலாளராகவே நீண்டகாலம் இருந்து வந்த ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தான் துணைப் பொதுச் செயலாளர்அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
இந் நிலையில் தற்போது தேசிய அளவில் திமுக சார்பில் பேச டெல்லியில் காலடி எடுத்து வைத்துள்ளார். தேசிய அளவில்திமுகவின் பிரதிநிதியாக ஸ்டாலின் செல்வது இதுவே முதல் முறையாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என்று கருணாநிதியை வற்புறுத்தியதும் ஸ்டாலின்தான்என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். தற்போது காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் அவரே பேச்சு நடத்தஆரம்பித்துள்ளார்.
திமுகவில் ஸ்டாலினின் நிலையை பலமாக்கிக் கொள்ளவும், தனது அரசியல் வாரிசாக ஸ்டாலினுக்கு முடி சூட்டவும் இந்தத்தேர்தலை கருணாநிதி ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
ஸ்டாலின், சோனியா சந்திப்புக்குப் பின் சென்னை வரும் சோனியா, கருணாநிதியும் சந்திப்பார்.
இன்று காலை டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாலை தான்சோனியா காந்தியை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றார்.