மதிமுகவுக்கு எந்தெந்த இடங்கள்?: கருணாநிதி முடிவு செய்வார்"
சென்னை:
மதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதிமுடிவு செய்வார் என்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப்பின்னர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில்போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
மேலும், மதிமுகவுக்கு எத்தனை சீட் கொடுப்பது என்ற முடிவை திமுக தலைவர் கருணாநிதியிடமே விட்டு விட முடிவுசெய்துள்ளோம். கட்சித் தலைவர் வைகோவுடன் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில், திமுக தலைவர்கருணாநிதியே அனைத்தையும் மேற்கொள்வார். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைகருணாநிதியை முடிவு செய்வார்.
இம்மாதம் 25ம் தேதி வாக்கில் வைகோ ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கிறோம். வெளியே வந்தபிறகு திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது தொகுதிகள் பங்கீடுஇறுதி செய்யப்படும் என்றார் கணேசன்.
தேர்தல் வேலைகளை நடத்துவது மற்றும் தேர்தல் நிதி திரட்டுவது தொடர்பான வேலைகளை ஒருங்கிணைக்க,எல்.கணேடன், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் துரை, திருப்பூர் துரைசாமி ஆகிய 5 பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications