வறுமை: 4 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் 4 குழந்தைகளுடன், ஒரு பெண்கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பெருமாப்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா.இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஹரி விட்டல் ராவ் என்பவருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பெங்களூரில் வசித்து வந்த விட்டல்ராவ், காஞ்சனா தம்பதியினர் 4 குழந்தைகளுடன் வறுமையில் வாடி வந்தனர். இதனால் கணவன், மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சொந்த ஊரான பெருமாப்பட்டுக்கு வந்த காஞ்சனா அங்குள்ள கிணற்றில் தனது 4 குழந்தைகளையும்வீசி விட்டு அவரும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைப்பரப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+