கூட்டணி: திமுகவால் தொடர்ந்து ஒதுக்கப்படும் வாசன்
சென்னை:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான புதிய கூட்டணி மென் மேலும் வலுவடையும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஜி.கே.வாசன் தொடர்ந்து ஒதுக்கிவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வாசனை தொடர்ந்து அதிமுக அனுதாபியாகவே திமுக தலைமை பார்த்துவருகிறது.
இதனால், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக தலைமை நேரடிப் பேச்சு நடத்தி வருகிறது.டெல்லியில் சோனியாவை திமுக தூதர்களான ஸ்டாலின், பாலு, தயாநிதி ஆகியோர் சந்தித்தபோது, அங்கிருந்தவாசனை காங்கிரஸ் தலைமை அழைக்கவில்லை.
இந் நிலையில் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய வாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிரதிநிதிகளாக ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் சோனியாகாந்தியுடன் நடத்திய பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வனமாதாகவும், கூட்டணிக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும்அமைந்திருந்தது.
வரும் காலங்களில் இந்தக் கூட்டணி மென் மேலும் வலுவடையும். அதற்கேற்ற வகையில் தமிழக காங்கிரஸும்செயல்படும் என்றார்.