அழகிரி பாஸ்போர்ட்டை முடக்க கோரி தமிழக அரசு மனு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிஅமெரிக்கா செல்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டும் என்றும்கோரி மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜபருல்லா கான் முன்பு ஆஜராகினர்.

அப்போது அரசு வழக்கறிஞர் கந்தசாமி நீதிபதியிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், மு.க.அழகிரி அமெரிக்காசெல்லப் போவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தா.கிருட்டிணன் கொலை வழக்கில்அவர் முக்கியக் குற்றவாளி. வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. இந் நிலையில் அவர் அமெரிக்கா சென்றால்விசாரணை பாதிக்கப்படும்.

எனவே அழகிரி அமெரிக்கா செல்ல தடை விதித்து அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து முடக்கி வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்து.

இதைத் தொடர்ந்து இந்த மனு மீது இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். வாதத்திற்குப் பின்னர் இதுதொடர்பான முடிவை வருகிற 21ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அழகிரி தற்போது ஜாமீனில் உள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் சமீபத்தில்தான் சென்னைஉயர் நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+