அதிமுகவுடன் கூட்டணி: 2 நாளில் தெரியும் என்கிறார் இல.கணேசன்
திருநெல்வேலி:
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பது குறித்து இன்னும் 2 நாளில் தமிழக பா.ஜ.க. முடிவு செய்து வருகிற 21ம்தேதி அறிவிக்கும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வருகிற 21ம் தேதி சென்னையில் பா.ஜ.க.வின்தேர்தல் குழு கூடி விவாதிக்கவுள்ளது. அப்போது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணிவைப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும்.
எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் துவக்கி விட்டோம்.39தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் வாஜ்பாய் தலைமையை ஏற்கும்கட்சிகளுடன்தான் கூட்டணி வைப்போம் என்பதை ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளோம்.
அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வரலாம்என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன்.