டிஸ்மிஸ்: 999 அரசு ஊழியர்களும் திங்கள்கிழமை மேல்முறையீடு
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்களும் வரும் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட்செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீதான வழக்கை விசாக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுஅமைக்கப்பட்டது.
இந்த குழுவின் விசாரணையின் இறுதியில் 999 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 230 பேர் எந்தவிததண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு அபராதம், பதவியிறக்கம் ஆகிய தண்டனைகள்கொடுக்கப்பட்டன.
இந் நிலையில் டிஸ்மிஸ் ஆனவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றுஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இது குறித்து தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், 999 பேரையும்மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீக்க வேண்டும் என்றுகோரி நிதியமைச்சர் பொன்னையன் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
வரும் திங்கள்கிழமை வரை முதல்வரின் பதிலுக்காக காத்திருக்கப் போகிறோம். அதன் பிறகும் நிவாரணம்கிடைக்காவிடில் திங்கள்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 999 அரசு ஊழியர்களும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications