நெடுஞ்சாலைத் துறை ஊழல்: கண்ணப்பனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கடந்த அதிமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, தளவாடப்பொருட்கள் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள்அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 54 பேருக்கு சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

தற்போது மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவராக உள்ள கண்ணப்பன், அமைச்சராக இருந்தபோதுநெடுஞ்சாலைத் துறைக்கு தளவாடம் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அவர் மீது சேலம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கண்ணப்பன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிற்சபேசன்உள்ளிட்ட 65 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 11 பேர் விசாரணைக் காலத்தின்போது இறந்துவிட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையொட்டி கண்ணப்பன்உள்ளிட்ட 54 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதையடுத்து வழக்கை பிப்ரவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+