செயற்கைக் கால்: மதானி கோரிக்கைக்கு பதில் தர அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானியின் ரிட் மனுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சிறைத்துறைத் தலைவர், கோவைமத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 50க்கும் மேற்பட்டோர்பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவரான அப்துல் நாசர்மதானி கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு மதானியின் வலது கால் விபத்து ஒன்றில் காயமடைந்து, அறுவைச் சிகிச்சை மூலம்துண்டிக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள லார்ட்ஸ் செயற்கைக் கால் மையத்தில் அவருக்குசெயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
செயற்கைக் காலின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்தான். செயற்கைக் கால் தனது ஆயுட்காலத்தைக் கடந்த நிலையில்1998ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது செயற்கைக் காலை மாற்றதிருவனந்தபுரம் செல்ல அனுமதிக்குமாறு மதானி கோரி வந்தார். ஆனால் கோவை நீதிமன்றங்களில் அவரதுகோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதானி சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். 23ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் அதில் அவர் உத்தரவிட்டுள்ளார்.