ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு: 22ம் தேதி தீர்ப்பு?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கில் வருகிற 22ம் தேதி தீர்ப்புவழங்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்ற வகையில் ரூ. 28.29 கோடிஅளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன்,ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு கூற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்தத் தடை நேற்று நீக்கப்பட்டது. இதையடுத்துஜெயலலிதா மற்றும் ராமச்சந்திரன் சார்பில் சென்னை தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை இன்னும் 3 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்களது மனுவைப் பரிசீலித்த நீதிபதி, கால அவகாசம் கொடுத்து 22ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.அன்றே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.