For Quick Alerts
For Daily Alerts
Just In
தேர்தல் தேதி முடிவு செய்ய பிப்.4ம் தேதி மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
டெல்லி:
மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின்கூட்டத்தை, தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 4ம் தேதி கூட்டியுள்ளது.
வரும் ஏப்ரம் அல்லது மே மாதத்தில் மக்களவைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்தல்முன்னேற்பாடுகள், திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை, மின்னணுஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த புதிய தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம்,மக்களவைத் தேர்தல் நடத்த தேதிகளை முடிவு செய்வது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்என்றார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, January 21, 2004, 5:30 [IST]